Sunday, June 6, 2010

நெய்தவண்ண பட்டு

நெய்தவண்ண பட்டுடுத்தி
நையப்புடைத்து சென்றவளே
நெய்தவண்ண பட்டிலொரு
நூலாக ஆசையில்லை எனக்கு
உயிரற்ற பொருளாகி
ஆவதென்ன எனக்கு - உன்
முந்தானை நுனியில் மட்டும்
முடிந்துகொண்டால் போதுமடி
முந்நூறு ஆண்டு தவ
முக்தியினை நான்பெறுவேன்

No comments:

Post a Comment