Sunday, June 6, 2010

விழித்திரையில் இரவு

பகலெல்லாம் திரட்டியுந்தன்
விழித்திரையிலவன் கொட்டிவைத்தால்
இரவெல்லாம் திரட்டியுந்தன்
விழியிமையில் நீ தீட்டுவதோ
கொட்டியது பகலாக
தீட்டியது இரவாக
வெட்டி வெட்டி துடிக்குமொரு
மாலை வேளையிலே - நான்
மயங்கி நிற்கையிலே
புருவமெனும் வில்லெடுத்து
மன்மத அம்புதனை நீ பாய்ச்ச
மறுபிறவி தானின்றி
மாதவனின் பாதவடி நான் சேர்வேன்

No comments:

Post a Comment