பகலெல்லாம் திரட்டியுந்தன்
விழித்திரையிலவன் கொட்டிவைத்தால்
இரவெல்லாம் திரட்டியுந்தன்
விழியிமையில் நீ தீட்டுவதோ
கொட்டியது பகலாக
தீட்டியது இரவாக
வெட்டி வெட்டி துடிக்குமொரு
மாலை வேளையிலே - நான்
மயங்கி நிற்கையிலே
புருவமெனும் வில்லெடுத்து
மன்மத அம்புதனை நீ பாய்ச்ச
மறுபிறவி தானின்றி
மாதவனின் பாதவடி நான் சேர்வேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment